எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
திருச்சி, ஏப்.28 தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டத்தினை கருத்தாளராகவும் வகுப்பறையிலும் மிகசிறப்பாக செயல்படுத்தியமைக்காக தேர்வு செய்யப்பட்ட திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றிய ஆசிரியர்கள் தமிழ்செல்வி, லூமின்ஜார்ஜியான, எலிசபெத்ராணி ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.