முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 247
Stalin trichy visit

திருச்சி, ஆக.26 திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை  நகராட்சி நிருவாகத்துறை  அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களிடம் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபி சானு, மாவட்ட நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் க.வைரமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞான சுகந்தி, மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார், விளையாட்டு விடுதியின் மேலாளர் கண்ணன், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.