முதல்வர் வருகை: திருச்சியில் ட்ரோன்கள் பறக்கத் தடை
திருச்சி, ஜூலை 10 தமிழக முதல் வர் ஜோசப் விஜய் வருகையை முன் னிட்டு திருச்சியில் வெள்ளிக்கிழமை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க தமி ழக முதல்வர் ஜோசப் விஜய், சென் னையிலிருந்து விமானம் மூலம் திருச் சிக்கு வெள்ளிக்கிழமை காலை வருகி றார்.
விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் மற்றும் தவெக நிர்வா கிகள், தொண்டர்கள் உற்சாக வர வேற்பு அளிக்கவுள்ளனர். பின்னர், விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக கரூர் செல்கிறார் முதல்வர்.
எனவே, பாதுகாப்பு காரணங்களைக் கருதி முதல்வர் வந்து செல்லும் நிகழ்வுக்காக திருச்சி மாவட்டத்தில் முதல்வர் பயணம் செய்யும் சாலை வழிகள் மற்றும் விமான நிலைய சுற் றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடு வோர் மீது சட்டப்படி கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தெரிவித் தார்.