100 நாள் வேலை உறுதித்திட்டத்தின் பெயரை மாற்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 127
Stalin trichy visit

திருச்சி, பிப்.2 மகாத்மா காந்தியின் 100 நாள் வேலை உறுதித்திட்டத்தின் பெயரை மாற்றி, திட்டத்தை நீர்த்துப்போக திட்டமிடும், பாஜக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில், தெற்கு மாவட்டத்தலைவர் ராஜலிங்கம்,வடக்கு மாவட்டத்தலைவர் தொட்டியம் சரணவன் மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தலைவர் பெனட் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாநில ஒருங்கிணைப்பாளர் வி எம் சி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.

நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெயபிரகாஷ், செல்லப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் இளையராஜா, அடைக்கலராஜ், கோட்டத்தலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், உறையூர் பாக்கியராஜ், ஸ்ரீரங்கம் ஜெயம்கோபி, காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், சுப்ரமணயபுரம் எட்வின், ஏர்போர்ட் கனகராஜ், அணித்தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, இந்திரா தோழி மாரீஸ்வரி, ஆர்.டி.ஐ பிரிவு கிளமென்ட், இலக்கியபிரிவு பத்மநாபன், எஸ்.சி. பிரிவு கலியபெருமாள், விவசாயப்பிரிவு அண்ணாத்துரை, நெசவாளர்பிரிவு சேகர், அப்துல் ரஹீம், கலைப்பிரிவு சுப்புராஜ், வார்டு நிர்வாகிகள் சரவணன், கண்ணன், பாண்டியன், அனந்தப்பத்மநாபன், அஞ்சலி தேவி, ரபீக், புனிதா, தனலெட்சுமி, கோகிலா, அமலோற்பவமேரி, மணி, மார்ட்டின், கிஷோர், வளன்ரோஸ், எழில், மற்றும் வடக்கு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.