கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க சதியா?
திருச்சி, ஜுன் 2 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி ரயில் தண்டவாளத்தில் நள்ளிரவில் தண்டவாளத்தில் கிடந்த லாரி டயர்களில் கன்னியாகுமரி விரைவு மோதியதால் 40 நிமிடம் தாமதமாக சென்னை சென்றது.
கன்னியாகுமரியில் இருந்து வண்டி எண்12643 என்ற ரயில் நேற்று இரவு சென்னைக்கு செல்வதற்காக புறப்பட்டது. இந்த ரயில் திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு 12.30 மணிக்கு வந்த ரயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது அப்போது பிச்சாண்டார் கோவில் ரயில் நிலையம் தாண்டி வாளாடி ரயில் நிலையம் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தின் நடுப்பகுதியில் இரண்டு பெரிய லாரி டயர்கள் இருந்துள்ளன. அதிவேகத்தில் வந்த கன்னியாகுமரி ரயில் டயரின் மீது ஏறியதில் ரயிலின் சக்கரத்தில் சிக்கி அந்தப் பகுதியிலேயே ரயில் நின்றது. இதனால் ரயிலின் குழாய் ஓரிடத்தில் பழுதடைந்தது. நள்ளிரவு 1.05 மணிக்கு நிறுத்திய ரயில் 1.45 மணிக்கு சரி செய்து 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக விருத்தாச்சலம் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிவண்ணன் விசாரணை செய்து வந்த நிலையில். அப்பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 31ஆம் தேதி மேலவாளாடி ரயில்வே தண்டவாளம் அருகில் பாலத்தின் கீழ் சாலை பணி செய்வதற்காக ஜேசிபி மூலம் குழி தோண்டி உள்ளனர். அச்சமயத்தில் மணலுக்கு அடியில் இருந்த ரயில்வே டிராக் சிக்னல் கேபிள் பழுதடைந்ததால் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை. இதுகுறித்தும் ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து அடையாளம் தெரியாத ஜேசிபி ஓட்டுநர் மீது ரயில்வே காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து மேல வாளாடியைச் நான்கு நபர்கள் ரயில்வே காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் அந்த நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும், அல்லது மர்ம நபர்கள் ரயிலை தவிர்க்க சரியா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர். தண்டவாளத்தில் ரயில் டயர் இருந்த சம்பவத்தில் ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.