ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
திருச்சி, டிச.2 திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் காமினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, திருச்சிமாநகர காவல் துணை ஆணையர் சிபின், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் சிவராம் குமார், ஞானசேகரன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.