திருச்சி மாநகரில் பணியாற்றிவரும் காவலர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் எஸ்.ஐ. யாக பணிபுரிந்து வருபவர் கண்ணன்(வயது 55). இவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்ததை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் பரிசோதனை செய்து கொண்டார்.
அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யபட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனது வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டார். இதனைத் தொடர்ந்து விமான நிலைய ஆய்வாளர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.