நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு
திருச்சி, செப்.24 மண்ணச்சநல்லூர் வட்டம், இருங்களூர் கிராமத்தில் இன்று காலை ஊருக்குள் நுழைந்த மானை நாய் கடித்து விட்டது. உடனடியாக கால்நடை மருத்துவர்க்கும். வனத்துறைக்கும் கிராம ஊராட்சி மன்றத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மானை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து இருங்களூர் கிராம ஊராட்சி மன்றத்தின் மூலமாக ஜேசிபி வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவமனை அருகிலே குழி தோண்டி வனத்துறையினரால் புதைக்கப்பட்டது .