த.வெ.க. அரசைக் கண்டித்து திருச்சியில் ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஆக.20 போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை வடமாநில தனியார் நிறுவனத்திற்கு வழங்கி த.வெ.க. அரசைக் கண்டித்து திருச்சியில் ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போக்குவரத்து துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதை கண்டித்து ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் இன்று திருச்சி தில்லைநகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் அந்த ஒப்பந்த நகலை கிழித்தெரிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.