மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, ஜுன் 13 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், அழகியமானவாளம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.83 லட்சம் மதிப்பீட்டில் வரத்து வாய்க்காலில் நீர் உறிஞ்சி குழிகள் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.