காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தா.மா.க. விவசாய அணி சார்பில் பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
திருச்சி, ஜூலை 17 காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாள் விழா ஜூலை 15 அன்று தா.மா.க விவசாய அணி திருச்சி மாவட்டம் மணிகண்டம் வட்டாரம் சேராபட்டி குஜிலியம்பட்டி கிராமத்தில்க. யேசுதாஸ் விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் தலைமையில் நடந்தது அதில் மாவட்ட விவசாயிஅணித்தலைவர் தலைவர் S. செல்வம், மண்டல பொதுச் செயலாளர் N. ராஜேந்திரன் கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் செந்தில் Aரமேஷ்வரி செந்தில்,ஸ்ரீராம், விஜயா கருவாயி. சபரிஅம்மாள் டெய்சி, தனுஷ், மேரி ஆகியோர் உள்பட திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு காமராஜ் வாழ்க்கை வரலாறு பற்றி ஆசிரியர்கள் சொற்பொழிவு ஆற்றி எடுத்துரைத்தனர் மேலும் பள்ளி குழந்தைகள் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உலகில் அவர்கள் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்கள் 30000 /- மதிப்பீட்டில் இலவசமாகவும் மேலும் காமராஜ் வாழ்க்கை குறிப்பு கையெடும் வழங்கப்பட்டது.
மேலும் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகளான லாரன்ஸ், சபரி, ராஜ், கிளாரட், திருப்பதி காளிமுத்து, சின்னையா, மது, ராஜ், தியாகராஜன், ரமேஷ் சேட்டு, அய்யனார். ரவி மேற்கண்ட நபர்கள் மேற்கண்ட நபர்கள் வாழ்வியல் நடைமுறைகளை பற்றி குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர்