ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கல்
திருச்சி, பிப். 24 புரட்சித்தலைவி அம்மாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் காஜாபேட்டை பகுதிக்கு உட்பட்ட முதலியார் சத்திரம் டி இ எல் சி நடுநிலை பள்ளியில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் மாணவ மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளர் அரவிந்தன் கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர் சதர் மாவட்ட அணி செயலாளர்கள் வெங்கட்பிரபு, நசீமா பாரிக் பகுதி செயலாளர்கள்சண்முகம், எல் கே ஆர் ரோஜர் பகுதி கழக அவை தலைவர் ரவீந்திரன், வட்டக் கழக செயலாளர்கள் சுந்தரவடிவேல், சையதுரபிக், டைமன் ஆர் தாமோதரன், நார்த்தாமலை செந்தில்குமார், கல்லுக்குழி, மனோஜ்குமார், வழக்கறிஞர் முல்லை சுரேஷ் நிர்வாகிகள் டி குமார் பூக்கடை முத்துக்குமார் எடத்தெரு மாரியப்பன், சண்முகம், கீதா ராமநாதன், மூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்