தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கிய திமுகவினர்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் தமிழ் சங்கம் மற்றும் திமுகவினர் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தலின் படியும், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் தொழிலதிபருமான கே.என்.அருண் நேரு வழிகாட்டுதலின் படி முன்னாள் நகர செயலாளர் ஏ.பி. சரவணன், மாவட்ட கவுன்சிலர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கி மே தின வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் முனாப், வெங்கடேஷ், நல்லுசாமி, அம்ஜத்கான், ராஜேஷ் குமார், தமிழரசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.