முதியவர் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை!
திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவில் முனிசிபல் காலனி செல்லும் வழியில் ஒரு மரத்தில் முதியவர் தூக்கில் சடலமாக தூங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விசாரணையில் தூக்கில் தொங்கியது தஞ்சை மாவட்டம் பூதலூர் தூதராக நல்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பது தெரியவந்தது மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.