துறையூர் அரசு போக்குவரத்து பணிமனையில் தொ.மு.ச நிர்வாகிகள் தேர்தல்
துறையூர் அரசு போக்குவரத்து பணிமனையில் மும்முனைப் போட்டியில் தேர்தல் தொ.மு.ச நிர்வாகிகள் களம் காண்கின்றனர்

திருச்சி மாவட்டம் துறையூர் அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் செயலாளர் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது இதில் தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியிடுகின்றனர் சுப்பையா எண்1-லும். ரமேஷ் எண்2-லும் சரவணன் எண்3-லும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இப்பகுதியில் மும்முனைப் போட்டி நிலவி வருவதாக தொ.மு.ச் நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும்
மொத்த வாக்குகள் 378 ஆகும் வாக்கு அளிப்பதற்க்கு சின்னமாக எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
என் 1ல் மனோகரனும் முத்துராஜ் எண்.2லும் செயலாளார் பதவிக்கு போட்டியிடுகின்றனர்
ராஜ் எண் ஒன்றிலும் அன்பானந்தன் என் இரண்டிலும் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு சுரேஷ்குமார் கண்ணன் துணைச் செயலாளர் பதவிக்கு வீராசாமி மற்றும் இளங்கோவன் போட்டியிடுகின்றனர் இதில் எண் ஒன்றில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறு நபர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
வாக்கு எண்ணிக்கை காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்று மாலை 6 மணிக்குள் தலைவர் செயலாளர் பொருளாளர் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தேர்தல் பணிக்குழு தெரிவித்துள்ளது.