மின்வாரிய அதிகாரிக்கு ஜிபே-யில் லஞ்சம் : காவல் நிலையத்தில் புகார்
திருச்சி, ஆக.6 விதியை மீறி பணி செய்ய மறுத்த அதிகாரிக்கு gpay யில் லஞ்சம். திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார்.
மின் பணி சோதனை ஒப்பந்ததாரர் பிரசாத் என்பவர் மீது, மின் வாரிய கிராப்பட்டி எடமலைப்பட்டி புதூர் மின் வணிக பிரிவு ஆய்வாளர் (CI) இந்திரா புகார். லஞ்சம் வாங்க மறுத்த தன்னை மிரட்டுவதற்காகவும், தனது வங்கி கணக்கிற்கு gpay மூலம் லஞ்ச பணமாக ₹40 ஆயிரம் அனுப்பிவைத்த பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் அளித்துள்ளார்.