மழையால் சேதமடைந்த வீடு : அமைச்சர் நிதியுதவி வழங்கினார்
திருச்சி, ஆக.6 திருவெறும்பூர் தொகுதியில் மழையின் காரணமாக இடிந்த வீட்டை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு நிதியுதவி வழங்கினார்.
திருச்சி திருவெறும்பூர் தொகுதி க்குட்பட்ட திருச்சி துவாக்குடி ராவத்தான் மேடு குமாரசாமி சாமியின் வீடு மலையின் காரணமாக இடிந்தது அதை அறிந்த அமைச்சர் அந்த வீட்டை பார்வையிட்டு நிதியுதவி வழங்கி வீட்டை மறு கட்டமைப்பு செய்வதற்கு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்
இந்நிகழ்வில் துவாக்குடி நகர மன்ற தலைவர் காயம்பு, மாவட்ட டி ஆர் ஓ ராஜலட்சுமி, நகராட்சி ஆணையர் பட்டுசாமி, திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, திருச்சி ,திருச்சி மாவட்ட ஆர் டி ஓ அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.