கோ.ஆப்டெக்ஸில் தீபாவளிக்கான முதல் விற்பனை : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, செப். 23 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கான முதல் விற்பனையை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் வைரமணி, கோ.ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் நாகராஜன், மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தில் கோபி, திருச்சி பொதிகை கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் சங்கர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.