முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் பிறந்தநாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் மலர் தூவி மரியாதை
திருச்சி, ஆக. 17 திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் மனசாட்சியாகவும் முன்னால் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த முரசொலி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்
இந்நிகழ்வில் மாவட்ட பகுதி கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன் சேகரன் சபியுல்லா செந்தில் மோகன் அணிகளின் அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.