கஞ்சா விற்பனை செய்தவர் கைது
திருச்சி.ஆக.23 திருச்சி மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு எடமலைப் பட்டி புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எடமலைப் பட்டி புதூர் ஷரி பாஸ்கர் காலனி பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த சரோஜினி ( 51 ) என்பவரை மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.