பெண் போலீஸ் மீது திருட்டு புகார்!
திருச்சி கொட்டப்பட்டு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சசிகலா(வயது 36). இவர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது;-
கடந்த 13ம் தேதி கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினோம். வீட்டு காம்பவுண்ட் கேட் பூட்டு உடைக்கப்பட்டு ஜன்னல்
மற்றும் கதவு திறந்து கிடந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் அரியமங்கலம் போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் சுஜாதா, அவரது கணவர் பிரபு ஆகியோர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை திருட முயன்ற காட்சி பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.