வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
திருச்சி நவ 12 திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்புஜம் (வயது67) இவர் கடந்த பத்தாம் தேதி தன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார் பிறகு மீண்டும் மறுநாள் 11ந்தேதி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கம்பி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 13 கிராம் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி பூஜை சாமான்கள் மற்றும் இரண்டு கைக்கடிகாரங்கள் திருடு போனது தெரியவந்தது இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.