மயங்கி விழுந்து காவலாளி சாவு
திருச்சி நவ 12 – திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி அருகே உள்ள
பழுவருத்தி கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 49)இவர் தனரத்னம் நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்,
இந்நிலையில் நேற்று பணியில் இருந்தபோது திடீரென்று சிவபெருமாள் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் சிவபெருமாள் இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.