மருங்காபுரி ஊராட்சியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் ஊத்துக்குளி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள
பயணியர் நிழற்குடையை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் , மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது முன்னிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (23.11.2022)
திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மருங்காபுரி ஒன்றிய குழு தலைவர் எம். பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் சிவகுமார். ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி சுப்பிரமணியன், ஒன்றிய குழு துணை தலைவர் சரோஜா செல்வராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்