காமராசர் பிறந்தநாள் : காமராஜர் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை

0 190
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15   கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு காமராஜர் பேரவை சார்பில் தலைவர் சிவாஜி சண்முகம் தலைமையில் எல் ஐ சி ஜெயராமன், அண்ணா சிலை விக்டர், திருச்சி மகாராஜா ஆகியோர் முன்னிலையில் பால் அபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கலந்துகொண்டு அவரது  திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மார்க்கெட் கோட்டத் தலைவர் சம்சுதீன், நிர்வாகிகள் மார்க்கெட் மாரியப்பன், மலைக்கோட்டை சேகர், கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், கோகுல், நிர்மல், சொக்கலிங்கம், கவி பைக் கார்த்திக், சாம் ரோஷன், சிவகிரி, கேசவன், டேனி, அவினாஷ், விக்னேஷ், மதன் பாலர் காங்கிரஸ் முஸ்தபா டிவி கோயில் தியாகராஜன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.