கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமில் : மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருச்சி, ஜூலை 30 திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் 526 குடியிருப்பு கட்டடங்களின் கட்டுமான பணிகளை தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபி சானு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மண்டல தனித்துறை ஆட்சியர் (இலங்கை தமிழர் மறுவாழ்வு மய்யம்) கா.நஜிமுன்னிசா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.