கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, செப். 27 திருச்சி பாலக்கரை கூனி பஜார் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் தனபால் (44)இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. தனபால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.