மண் வளம் காப்போம் விழிப்புணர்வு பேரணி
உப்பிலியாபுரம் அடுத்த கொப்பம்பட்டியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் எம்.ஐ.டி. வேளானண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளங்கலை நான்காம் ஆண்டு மாணவர்கள் “மண் வளம் காப்போம்” எண்ணும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இப்பேரணி கொப்பம்பட்டி அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சே.கோகுல்,ஆ.கோகுல்ராஜு, ர.கௌதம், ச.ஹரிகிருஷ்ணன், க.ஹரிஹரன்,
இரா.கல்யாண், மீ.கண்ணப்பன் ஆகிய மாணவர்கள் பங்கேற்றனர். இப்பேரணி கொப்பம்பட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து தொடங்கி அரசு நடுநிலை பள்ளியில் நிறைவடைந்தது.