மேஜர் சரவணன் நினைவு தினம்: அமைச்சர் கே.என்.நேரு மரியாதை
திருச்சி, மே 29 கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் சரவணனின் 24 ஆம் ஆண்டு நினைவு நானை முன்னிட்டு திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டாவில் உள்ள அவரது நினைவு தூணுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மலர் வளையம் வைத்து பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாநகர காவல் ஆணையர் சத்திப்பிரியார், மேயர் மு.அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.