திருச்சி ஸ்ரீரங்கம் பழைய பஸ்நிலையத்தில் பழக்கடை நடத்தி வருபவர் குமார்(வயது 53). இவருடைய கடையில் வாசுகி, ராசாத்தி, பிருந்தா உள்ளிட்ட பெண்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கடைக்கு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன்(50) என்பவர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.