தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
திருச்சி, ஜன.3 திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்த புதுக்கோட்டை மாவட்டம், செவல்பட்டியைச் சேர்ந்த
சுப்பிரமணியன் (வயது 60) என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் பிடித்து மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 1880 ரொக்கப் பணம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு மொபைல் போனையும் பறிமுதல் செய்யப்பட்டன.