அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது
திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா விற்றவரை துவாக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது தெற்கு மலை சமாதானபுரம் பகுதியில் முகமது இஸ்மாயில் ( 42 ) என்பவர் தமிழக அரசாள் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல் பான் மசாலா, வி ஒன் ஆகியவற்றை வித்துக் கொண்டு இருந்தபோது கையும் களவுமாக பிடித்ததோடு அவரிடம் இருந்து 6 கிலோ ஹான்ஸ், இரண்டு கிலோ 250 கிராம், எடை கொண்ட விமல் பாக்கு 900 கிராம் எடை கொண்ட வின் ஒன் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததோடு முகமது இஸ்மாயிலையும் கைது செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.