100 சதவீதத்தில் உரம் வழங்க ஆணை வழங்கல்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரம் மண்ணச்சநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன் இன்று 14.07.2023 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் நூறு சத மானியத்தில் உரம் பெறுவதற்கான ஆணைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். அது சமயம் மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி அலுவலர்கள் பார்த்திபன், ஆனந்த், பாபு, பன்னீர்செல்வம், கதிரேசன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.