திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மே தினம் அனுசரிப்பு
மே தினமான தொழிலாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மே தின நினைவு சின்னத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி தொ.மு.ச கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். நிகழ்வில் மாநகர செயலர் மதிவாணன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் செந்தில் கவிஞர் சல்மா, அரங்கநாதன், சேகரன், சபியுல்லா,கோவிந்தராஜ் செங்குட்டுவன்,குணசேகரன் பகுதி மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.