முதலமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி தெரிவித்தார்
திருச்சி, ஆக. 10 திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் நிறுவப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலையை அவரது நினைவு (ஆக.7) நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை முன்னிட்டு நேற்று முதலமைச்சரை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சந்தித்து கணையாழி (மோதிரம்) அணிவித்து மாவட்ட கழக நிகழ்ச்சி பதிவேட்டில் கையெழுத்து பெற்று நன்றி தெரிவித்தார்.