திருச்சி விமான நிலைய புதிய முனையத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு : தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
திருச்சி, ஆக.10 திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது. பல்வேறு பணிகள் முடிக்காமல் இருந்ததால், அவைகள் முடிக்கப்பட்டு, கடந்த மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையத்தில் புதிய முனையத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. பார்த்த தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் புதிய முனையத்திலுள்ள சமஸ்கிருத கல்வெட்டை அகற்றாவிட்டால், அனைத்து ஜனநாயக மற்றும் பெரியாரயி அமைப்புகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் விடுதலை அரசு தெரிவித்துள்ளார்.