திருவெறும்பூர் அரசு மாதிரிப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு
திருச்சி, ஆக.1 திருவெறும்பூரில் அமைந்துள்ள அரசு மாதிரிப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று முன்னறிவிப்பில்லா ஆய்வை மேற்கொண்டார்.
ஆய்வின் போது பள்ளி மாணவரின் மரணம் குறித்து கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கேட்டறிந்து, பள்ளி மாணவர்களிடமும் கலந்துரையாடினார். மாணவர் பயின்று வந்த வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஊக்கமளிக்கும் உரை போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.