மனிதம் சமூகப்பணி மையம் சார்பில் நீர்மோர் பந்தல் : அமைச்சர் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஏப்.7
மனிதம் சமூகப் பணி மையம் & டிரஸ்ட் நடத்தும் 9ஆம் ஆண்டு நீர் மோர் பந்தல் துவக்க விழா இன்று உறையூர் அருணா தியேட்டர் அருகில் நேற்றுநடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கள் துறை அமைச்சர் கே. என். நேரு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கினார். உடன் திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், திமுக மாவட்ட செயலாளர் வைரமணி, 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ், மனிதம் இயக்குனர் திரு. தினேஷ் குமார்,மனிதம் செயலாளர் நல்லாசிரியர் பிரேம் குமார்,பொருளாளர் டாக்டர்.பரமேஸ்வரி,மேலாளர் ஜாஹிர் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.