ஸ்ரீரங்கம், லால்குடி அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
திருச்சி, செப். 23 திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் இலால்குடி அரசு மருத்துவமனைகளுக்கு வருகை தந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மருத்துமனை உட்கட்டமைப்பு வசதிகள் – மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடுகள், ஆகியவற்றை பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கலந்துரையாடினார்.