புதிய தடுப்பணைப் பணிகள் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு
திருச்சி, ஜுன் 6 திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், காணக்கிளியநல்லூர் கிராமத்தில் நீர்வளத்துறையின் சார்பில் ரூ9.23 கோடி மதிப்பீட்டில் நந்தியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணைப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டிய உள்பட பலர் உள்ளனர்.