துறையூரிலிருந்து கோவைக்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்
திருச்சி, அக்.16 திருச்சி மாவட்டம், துறையூரிலிருந்து தொழில் நகரமான கோயம்புத்தூருக்கு இரண்டு புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், திருச்சி மாவட்ட அறங்காவல நியமனக்குழு தலைவர் மெடிக்கல் முரளி. துறையூர் நகர மன்ற சேர்மன் செல்வராணி மலர்மன்னன். ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன் தாஸ் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.