புதிய மின்மாற்றி : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, மார்ச் 6 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கிராப்பட்டி முதலாம் காவல் அணி வளாகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியினை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மேயர் மு.அன்பழகன், தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை, செயற்பொறியாளர் கணேஷ், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.