ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி
திருச்சி, செப். 12 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுவதை முனனிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் சார்பில் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும வகையில் சக்தி மற்றும் வளர்ச்சித்தரும் உணவுகள் அடங்கிய ஊட்டச்சத்து கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கி அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டத்தை அமைக்கும் பொருட்டு மரக்கன்றுகளை அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கினார். உடன் மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா, குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளனர்.