திருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி
தேசிய ஆயுர்வேத மருத்துவ தினத்தை முன்னிட்டு திருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமை பார்வையிட்டார்.