பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
திருச்சி, ஜுன் 12 கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகளில் திறக்கப்பட்டன. திருச்சி,பொன்னையா மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திரும்பிய மாணவ மாணவிகளுக்கு செண்டை மேளம் முழக்கத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி மாணவ மாணவர்களை வருக வருக என வரவேற்பு அளித்தனர். சிறப்பான பள்ளி நிர்வாகத்தின் முயற்சிக்கு பெற்றோர்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.