முசிறி அருகே மகன் கவனிக்காத விரக்தியில் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, நவ.12 திருச்சி மாவட்டம் முசிறி அருகே தேவனூர் கிராமத்தில் விவசாயி பொன்னுசாமி (65) இவரது மனைவி நல்லம்மாள் (55) இருவரும் வீட்டின் விட்டத்தில் (இரும்பு பைப்) தூக்கில் தொங்கியவாறு
மர்ம சாவு – தற்கொலையா (அ) கொலையா என தா.பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி மகன் வீரபாண்டி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முசிறி போலீஸ் டிஎஸ் பி சுரேஷ்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
இதையடுத்து உடற்கூறு பரிசோதனைக்காக சடலங்கள் முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டது.
பெற்றோர் இருவரையும் மகன் வீரபாண்டி கவனிக்காத விரக்தியில் தூக்கிட்டு கொண்டதாக காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.