மணப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் வராத நிலையில் பொதுமக்கள் அவதி
திருச்சி, மே 21 மணப்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் வராத நிலையில் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை காமராஜர் சிலை அருகில் உள்ள நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இதில் பணிபுரியும்,செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் நேற்று காலை 9.15 மணி வரை வரவில்லை. இதனால் மருத்துவ சிகிச்சை பெற வந்தவர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது .
எனவே உரிய நேரத்திற்கு பணியாளர்கள் வருவதற்கு மருத்துவ துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.