பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (10.01.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டியை நடத்திட ஆலோசனைகளை வழங்கினார், அருகில் இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை எஸ்தர் ஷீலா உள்ளார்