திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களுக்கு சேம்பர் அமைக்க கோரி மனு
திருச்சி, ஆக. 10 சென்னையில் உள்ள பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தலைவர் அமல்ராஜ், இணை தலைவர்கள்அசோக், பிரிசில்லா பாண்டியன், மாரப்பன் ஆகியோர்களிடம் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக 125 வருடம் பழமை வாய்ந்த திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு தனியறை( சேம்பர்) வசதி செய்து தர கோரி மேலும் மாண்புமிகு உயர்நீதிமன்ற கட்டிடக் குழு நீதிபதிகளிடம் பரிந்துரைந்து வழக்கறிஞர்கள் சேம்பர் கிடைக்க ஆவணம் செய்து தருமாறு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி வி வெங்கட் ஆகியோர் நேற்று மனு அளித்தனர்.