மாவட்ட ஆட்சியரகத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் தலைமையில் அனைத்து அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் சிவசுப்ரமணியன், மலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.